சில வருடங்களுக்கு முன் ஒரு சினிமா பாடல் வெளியானது. அந்தப் பாடலைப் பாடியவரையும்,அந்தப் பாட்டையும் யாரும் மறந்திருக்க முடியாது. வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்று தொடங்கும் அப்பாடல் ஒலிக்காத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நிறைந்திருந்த அப்பாடலை இப்பொழுது எங்குமே கேட்க முடிவதில்லை. அதை விடப் பரிதாபம் அந்த அருமையான கலைஞனையும் காணாமல் ஆக்கி விட்டார்கள். ஒரு கையை உயர்த்திப் பிடித்து ஒரே பாட்டில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் என்று ஒரு இடத்தில் கங்கை அமரன் குறிப்பிட்டார். அந்த அளவுக்கு யாரும் புகழ் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே!
இன்றைக்கு ஒரு பாடல் தமிழ் மக்களையும், அதைத்தாண்டி இந்தியாவையும், உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறதாம். அதுதான் கொலவெறி... கொலவெறி எனத் துவங்கும் பாடல். சமூகத்திற்கு உருப்படியான எந்தக் கருத்துக்களும் சொல்லாத, எவ்விதமான அர்த்தங்களும் இல்லாத இப்பாடல் யூடியூப் மற்றும் டைம் மேகஸின்,அமிதாப் பச்சனின் பாராட்டுதல்களும் பெற்று விட்டதாம். இனிமேல் பிறக்கப் போகும் குழந்தைகளும் கூட அம்மா வயிற்றிலிருந்து கொண்டு இந்தப் பாட்டைக் கேட்டே தீர வேண்டிய கட்டாயத்தில் தமிழ் மக்களின் வாழ்க்கையில் நீங்காத இடத்தைப் பிடிக்கப் போகிறது.
இத்தோடு கவிழப் போவது யார்? இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதிப் பாடிய தனுஷா? இசை அமைத்த இசை அமைப்பாளரா? காலம் விரைவில் பதில் சொல்லும். வாழுங்கள் வாழ விடுங்கள் மக்களே!!
சனி, 10 டிசம்பர், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)