இது தான்டா தேர்தல்...
ஆடிய ஆட்டம் என்ன? தேடிய செல்வம் என்ன?
கூடு விட்டு கூடு பாய்ந்த தென்ன? பேசிய பேச்சு என்ன?
எல்லாவற்றுக்கும் சேர்த்து தமிழ் மக்கள் வைத்தார்கள் ஆப்பு....
ஜெயலலிதாவாகட்டும்,பா.ம.க.வின் ராமதாஸாகட்டும்,வை.கோ, கம்யுனிஸ்டுகள்,கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல் விளையாட்டு விளையாடும் இன்ன பிற அரசியல் வியாபாரிகள், எல்லோருக்கும் சேர்த்து தமிழ் மக்கள் வைத்தார்கள் ஆப்பு.....
இப்ப எங்கே போய் முகத்தை வைக்கப் போகிறீர்கள் கயவர்களே?
இதில் சில காங்கிரஸ்காரனும் அடக்கம்.
சிங்கப்புர் ஆகவும்,துபாய் ஆகவும் மாற்றுவேன் என்று வோட்டு வாங்கி வெற்றி பெற்று தன்னை மட்டும் வளர்த்துக் கொண்டவர்களும் அடங்கிப் போனார்கள்.
சிதம்பரம் போன்ற அரசியல்வாதிகளுக்கும் செய்தி உண்டு. வெற்று வாக்குறுதிகளால் வெற்றி பெற முடியாது. கடைசி வரை பரபரப்பில் வைத்து ஏதோ கடைசி நேரத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் தோற்றிருக்க வேண்டும் என்பதே பலரின் ஆவலாக இருந்தது.
சில ஜோக்கர்களும் பாடம் படித்துக் கொள்ள வேண்டும் அது பாரதிராஜா, சீமான்,அமீர், ப.நெடுமாறன் மற்றும் பிற புலிகள் தின்று வீசும் எலும்புகளைப் பொறுக்கும் இந்திய விரோதிகள்.
தமிழ் மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல... கோமாளிகள் யார் என்று தெரிந்தே இருக்கிறார்கள்.
இன்னும் ஐந்து வருடங்கள் உங்களுக்கு நேரம் இருக்கிறது. நன்றாக உறங்கி இதுவரை சம்பாதித்ததை நன்றாகத் தின்று எங்கே என்ன எப்படித் தவறு செய்தோம் என்று அமைதியாக சிந்தித்து நல்ல அரசியல் செய்வதற்கு மீண்டு வாருங்கள். நேர்மையும்,சேவையும் இருந்தால் பொது மக்கள் பணத்தைத் தின்றாலும் பரவாயில்லை என இனி வரும் தலைமுறை இதை விட சிறப்பாக உங்களை வாழ வைக்கும் அல்லது வீழ வைக்கும்.!
1 கருத்து:
உலகமும் தமிழ் ஈழ விடுதலை புலிகளும்.
http://www.tamilusi.blogspot.com/
கருத்துரையிடுக